News

Sunday, 30 August 2020 07:25 AM , by: Daisy Rose Mary

Credit : daily thanthi

வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Tamil Nadu chief minister Edappadi Palaniswami) உத்தரவிட்டுள்ளார். இதனால் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து (Vaigai Dam) தண்ணீர் திறந்துவிட விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, தேனி (Theni) மாவட்டம் கம்பம் (Cumbam) பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு, நாளொன்றுக்கு 900 கனஅடி வீதம், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.க. அடி தண்ணீரினை 31.8.2020 முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். 

45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

இதனால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க...

Amazon pay-யில் LPG சிலிண்டர் புக் செய்தால் ரூ.50 தள்ளுபடி! ஆக.31வரை மட்டுமே!!

மீன்வளா்ப்பு திட்டங்களுக்கு 60% வரை மானியம் : பயனடைய அமைச்சர் அழைப்பு!!

கொரோனா நெருக்கடியிலும் காரீஃப் விதைப்பு அதிகரிப்பு!!

 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)