News

Tuesday, 08 November 2022 03:37 PM , by: Deiva Bindhiya

Tamil Nadu: Class 12th State Board Exams Starts March 13, 2023 announced by Anbil mahesh

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்றும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாநில வாரியப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் 8.8 லட்சம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 13, 2023 அன்று தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடையும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை திங்கள்கிழமை அறிவித்தது.

மாநில வாரியப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிவடையும் என்றும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 அன்று முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 8.5 லட்சம் மாணவர்கள் 11ம் வகுப்பு தேர்வை எழுதுவார்கள், சுமார் 10 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்வு எழுதுவார்கள்.

ஒவ்வொரு தேர்வும் மூன்று மணி நேரம் நடைபெறும் மற்றும் காலை 10 மணிக்குத் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வினாத்தாளைப் படிக்க பதினைந்து நிமிடங்கள் வழங்கப்படும், பின்னர் காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை தேர்வு எழுதுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

"மூத்த மாணவர்களுக்கான நடைமுறைத் தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாத தொடக்கம் வரை நடைபெறும்" என்று திரு அன்பில் மகேஷ் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மாணவர்கள் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், தேர்வு பயத்தை போக்கவும் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, பள்ளிக் கல்வித் துறை கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் பாடத்திட்டங்களைக் குறைப்பதாக அறிவித்தது. இந்த ஆண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்படவில்லை என்றும், மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில், பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றவும், வகுப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியுமா என்பதை உறுதி செய்யுமாறும், அங்குள்ள முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

70% மானியம்: கால்நடை காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு!

புதிய வேளாண் கருவிகள் கண்டுபிடிப்புக்கு பரிசு! இதோ முழு விவரம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)