News

Friday, 25 April 2025 10:00 AM , by: Harishanker R P

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு பகுதிகளில் தலா 8 செ.மீ., மழை பெய்து உள்ளது.

4 செ.மீ., மழை

இதற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடையில் 6; ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 5; கன்னியாகுமரி மாவட்டம், சுருளக்கோடு, நாகர்கோவில், முக்கடல் அணை பகுதியில் தலா, 4 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் வளிமண்டல கீழடுக்கில், இரு காற்று சந்திப்பு நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில், நாளை மறுதினம், 26 வரை அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். வெப்பம் அதிகரிப்பு, ஈரப்பதம் அதிகரிப்பு போன்றவற்றால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.

40.1 டிகிரி செல்ஷியஸ்

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

இதற்கு அடுத்தபடியாக, கரூர் பரமத்தி, திருச்சியில், தலா, 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியசுக்கு மேலும், தர்மபுரி, ஈரோடு, மதுரை விமான நிலையம், சேலம், தஞ்சாவூர், திருப்பத்துார், திருத்தணி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேலும் வெப்பம் பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related links:

ஒரு மாத சம்பளம் இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு வருவீர்களா? அதிகாரிகளை வறுத்தெடுத்த விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)