சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 19 August, 2019 11:30 AM IST

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் பால் நிறுவனம் அனைத்து வகையான பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியுள்ளது. நுகர்வோருக்கு தரமான பால் விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

விலை மாற்றம் குறித்த விவரங்கள்

ஆவின் பால்

பழைய விலை

புதிய விலை

மாதாந்திர அட்டை பயன்படுத்துவோருக்கு நீலம் (நிலைப்படுத்தப்பட்டது)

 

ரூ.34

 

ரூ.40

பச்சை (சமன்படுத்தப்பட்டது)

ரூ.39

ரூ.45

ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது)

ரூ.43

ரூ.49

மெஜந்தா (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது)

ரூ.35

ரூ.41

சில்லறை விற்பனை

நீலம் (நிலைப்படுத்தப்பட்டது)

 

ரூ.37

 

ரூ.43

பச்சை (சமன்படுத்தப்பட்டது)

ரூ.41

ரூ.47

ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது)

ரூ.45

ரூ.51

கொள்முதல் விலை மாற்றம்

தமிழக அரசு கொள்முதல் விலையிலும் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி பசும்பால் கொள்முதல் விலையினை லிட்டருக்கு ரூ 4 உயர்துள்ளத்துள்ளது அதாவது, லிட்டருக்கு ரூ 28 - ல் இருந்து ரூ 32 ஆக உயர்த்தி உள்ளது. அதேபோன்று எருமைப்பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றிற்கு 6 உயர்த்தியுள்ளது. அதன்படி இன்று முதல் லிட்டர் ஒன்றிற்கு ரூ 35 இருந்து ரூ 41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு விளக்கம்

இந்த அதிரடி விலை உயர்வு பெரும்பாலான மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா தலைமையிலான அரசு பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த உத்தரவிட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது என்று தெரிவிக்க பட்டுள்ளது. 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Tamil Nadu Government Revised Aavin Milk’s Selling Price and Procurement Price
Published on: 19 August 2019, 11:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now