சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 August, 2021 12:19 PM IST
Liquor sales increased 8 times

5 ஆண்டுகளுக்கு முன்பு 2 சதவீதமாக இருந்த பிரீமியம் வகை மது பாட்டில் விற்பனை தற்போது 16 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் குறைக்கப்பட்ட போதிலும் மது விற்பனை குறையவில்லை மாறாக 8 மடங்கு விற்பனை அதிகரித்து உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 20% குறைக்கப்பட்டது. 2006 முதல் 2021 வரை தமிழகத்தில் 1,311 மதுக்கடைகள் குறைக்கப்பட்டன.

6,736 மதுக்கடைகள் செயலில் இருந்த நிலையில் அவை இப்போது 5,425 ஆக குறைந்துள்ளது. மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்ட போதிலும் இந்த காலங்களில் மது விற்பனை 8 மடங்கு அதிகரித்துள்ளது.

இதே காலங்களில் ரூ.4,195 கோடியாக இருந்த மது விற்பனை தற்போது ரூ.33,746 கோடியாக உயர்ந்துள்ளது. சராசரியாக 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த காலங்களில் 2 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை மது விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கசிந்துள்ளது.

டாஸ்மாக் மது விற்பனை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. 2007-ல் உள்நாட்டில் தயாரிக்கும் வெளிநாடு மது வகைகள் 24 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டது. (ஒரு பெட்டியில் 48 குவார்ட்டர் பாட்டில்கள் இருக்கும்) இது 2021-ல் 50 லட்சம் பெட்டியாக அதிகரித்துள்ளது.

மது மீதான ஆயத்தீர்வை மற்றும் வாட் வரி உயர்வும் இன்னொரு காரணமாகும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறினர். பிரீமியம் வகை மதுபானங்கள் தேவை அதிகரித்து இருப்பதும் மது விற்பனை அதிகரிப்பதற்கு காரணமாகும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு 2% ஆக இருந்த பிரீமியம் வகை மது விற்பனை தற்போது 16 % ஆக உயர்ந்துள்ளது. சாதாரண மது வகைகளை விட பிரீமியம்(வெளிநாட்டு) மது வகைகளின் விலை அதிகமாக இருப்பதால் விற்பனையின் அளவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

இனி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை இல்லை!அதிரடி உத்தரவு !

மது பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி: விரைவில் அறிவிப்பு!!

English Summary: Tamil Nadu: Liquor sales increased 8 times
Published on: 20 August 2021, 12:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now