மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 August, 2021 10:37 AM IST
Megathathu karnataka tamilnadu issue

கர்நாடக மாநிலத்தில் பாயும் காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் 9,000 கோடி ரூபாய் மதிப்பில் அணை கட்ட அம்மாநில அரசு திட்டம் தீட்டியுள்ளது. பெங்களூரு மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளின் 4.75 டி.எம்.சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் உள்ளது. மேலும் 400 மெகாவாட் மின் உற்பத்தியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் எதிர்ப்பு(Tamil Nadu farmers protest)

டெல்டா பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும் என்பதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் தமிழக விவசாயிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசை அணுகி மேகதாது அணை கட்டும் விவகாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

முதல்வருக்கு எழுதிய கடிதம்( Letter to MK Stalin )

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதிய கடிதத்தில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டாம். இருமாநில மக்களின் நலன் கருதி தண்ணீர் சேமிப்பதற்கு அணை கட்டப்படுகிறது. வறட்சியான காலங்களில் பெரிதும் உதவும் என்று எழுதப்பட்டது.

விரைவில் அனைத்து கட்சி கூட்டம்(All party meeting soon)

இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் மேகதாது அணை கட்டும் விவகாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர், வரும் நாட்களில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நிலம் மற்றும் தண்ணீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும்  ஒன்றிணைய வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கி விடுவோம் என்று தெரிவித்தார். இதன்மூலம் மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அவ்வாறு நடந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பது கடினமாக இருக்கும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

விவசாயிகளின் கணக்கில் ரூ. 2000 ஏன் செலுத்தப்படவில்லை?

வேளாண் பட்ஜெட் நீண்டகால தேவையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்: அமைச்சர்

English Summary: Tamil Nadu no longer has water? Order of the Chief Minister of Karnataka!
Published on: 02 August 2021, 10:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now