மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2019 4:22 PM IST

14.04.2019 தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.

 பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு. உலகில்  உள்ள அனைத்து தமிழ் மக்களும் இந்நாளை மிக விஷேஷமாக கொண்டாடுவர்.இந்திய , மலேஷிய, சிங்கப்பூர், மேலும் தமிழர்கள் வசிக்கும் மற்ற நாடுகளிலும் தங்கள் பண்பாட்டை மறக்காமல்  சித்திரை 1 தமிழ்  புத்தாண்டு நாளை மிக விசேஷமாக கொண்டாடுவர். புத்தாண்டிற்கு முதல் நாளே மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரிக்க துவங்கிவிடுவார். புத்தாண்டன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து  பூஜை செய்து கடவுளுக்கு பொங்கல், இனிப்பு, பலகாரம், படைத்தது வழிபடுவர்.

மேலும்  மா,பலா, வாழை ஆகிய முக்கனிகள் மற்றும் வெற்றிலைபாக்கு, நெல், நகைகள் ஆகிய மங்களமான பொருட்களை வைத்து பூஜை செய்வர்.  இந்த நன் நாளில் மக்கள் தங்கள் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து இறை அருள்  பெறுவர்.பின் பலகாரங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ்வர், உறவினர் வீட்டிற்கு செல்வர். வீட்டின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று நன்மை பெறுவர்  .

தரையில் அமர்ந்து வாழை இலை போட்டு இலையை  நிரப்பும் வகையில் விதவிதமான உணவுகளை சமைத்து பரிமாறி உண்டு மகிழ்வர். இந்நாளில் குடும்பத்தை சார்ந்த அனைவரும் ஒன்றாக கூடி  மகிழ்வர்.

மேலும் இந்த தமிழ் புத்தாண்டு மாதத்தில் பிரத்யேக விசேஷமான மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருமிதமான விஷேஷத்திருவிழா  இம்மாத்தில் நடைபெறும்.இந்த மதுரை சித்திரை திருவிழாவை கண்டு இறை அருள் பெறுவதற்காக உலகெங்கிலிருந்தும் மக்கள் திரண்டு  வருவார். தமிழ் மக்கள் அனைவரும் இந்நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.

English Summary: Tamil new year
Published on: 12 April 2019, 04:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now