News

Monday, 15 April 2019 11:40 AM

சித்திரை மாதம்  என்றாலே தமிழ் புத்தாண்டு மற்றும் பிரத்யேகரமான மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருமிதமான திருவிழா. வருடா வருடம் மீனாட்சி அம்மன் சிவ  பெருமானின் இந்த தெய்வீக திருக்கல்யாணம் பெரிய கொண்டாட்டத்துடன் மதுரை நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தெய்வீகத்திருவிழாவை பார்க்க உலகெங்கிலிருந்தும் மக்கள் திரண்டு வருவர்.  உலகெங்கிலும் ஸ்ரீசுந்தரேஸ்வரர் (சிவபெருமான்) மீனாட்சி அம்மன் (பார்வதி தேவி)  இருவரின்  திருக்கல்யாணம் புகழ்பெற்ற திருவிழாவாகும். இத்திருக்கல்யாணத்தை கண்டு மக்கள் இறை அருள் பெற்று மனம் நிறைவாக வழிபட்டு செல்வர்.

முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கி  பின் திருவிழாவின் முக்கிய  நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு பின்  மூன்றாவது நாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். தங்கையின் கல்யாணத்தை பார்க்க முடியாமல் கோபித்துக்கொண்டு வைகை ஆற்றில் விஷ்ணு பரமாத்மா இறங்கும் நிகழ்வே திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். இதில் அழகர் தங்க ரத குதிரையில் அமர்ந்தவாறு காண்போர் கண்களுக்கு  தெய்வம் நேரிலே வந்ததுபோல ஒரு புத்துணர்ச்சியும் நன்மையையும் அளிக்கக்கூடிய வகையில் அமைகிறது. இத்தகைய இந்த புனிதமான நிகழ்வில் கலந்து கொள்ள உலகில் உள்ள அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் திரண்டு வருவார். 

பெருமாளை கும்பிடும் சமயத்தார் இடையையும் சிவபெருமானை கும்பிடுவோர் இடையையும்   இருவரின் சமயப்பிரச்சனை பெரும் அளவில் இருந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திருமலை நாயக்கர் காலத்திலேயே  இரண்டு விழாக்களையும் ஒரே திருவிழாவாக அமைத்தனர். இதனால் அணைத்து மக்களும் ஒன்று கூடி இத்திருவிழாவை பெரும் கொண்டாட்டத்துடன் நடத்தி வருகின்றன.  இன்றைக்கு இத்திருவிழா மதுரை நகரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து வருகிறது. 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)