பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 15 October, 2022 7:34 PM IST
Training School

தமிழரின் பாரம்பரிய இசையான பறையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் சிவகாசியில் அதிர்வு தமிழிசையகம் என்ற பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.

பறை இசையே தமிழரின் ஆதியிசை. ஒரு காலத்தில் நம் பிறப்பு முதல் இறப்பு வரை நம்மோடு ஒன்றிருந்த இந்த இசை இன்று ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று சுருக்கப்பட்டு, இறுதி ஊர்வலங்களில் மட்டுமே பயன்படுத்த பட்டு வருகிறது. அதனாலேயே இதன் மீது நடக்கும் சாதிய தீண்டாமைகள் ஏராளம்.

இதன் காரணமாகவே இதை வாசிக்கும் பலர் இதை விடுத்து வெவ்வேறு வேலைக்கு சென்று விட்டனர். இப்படி இதன் எதிர்காலமே யோசிக்கும் வகையில் இருக்கும் போது, அனைவரும் பறை கற்று கொண்டால் தான் இந்த கலையை மீட்டெடுக்க முடியும் மேலும் இதன் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள சாதீய தீண்டாமை களையும் களைய முடியும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.

சிவகாசியை சேர்ந்த அதிர்வு தமிழிசையகம் பயிற்சி பள்ளி.வார விடுமுறை தினமான ஞாயிறு அன்று அனைவரும் கூடி பறை அடிக்க பயின்று வருகின்றனர்.

இதற்கென இவர்கள் கட்டணம் கூட ஏதும் வசூலிப்பதில்லை.இதை நடத்தி வரும் சரவணகாந்த் பேசுகையில், பறை சங்க காலம் தொட்டே புகழ் பெற்ற இசைக்கருவி. இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இலவசமாக பயிற்றுவித்து வருவதாகவும், தற்போது பள்ளி கல்லூரி விழாக்கள், மேடை சிறப்பு நிகழ்வுகளில் பறை வாசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

பெண்களுக்கு கால்நடைகள் 90% மானியம், இதோ விவரம்

English Summary: Tamilisaiyakam Training School which teaches drums for free
Published on: 15 October 2022, 07:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now