மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 March, 2021 10:40 AM IST

டீசல் விலை உயர்வு காரணமாக லாரிகளுக்கான வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானவங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,

  • லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்துதல்.

  • 'டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும்.

  • பழைய வாகனங்கள் அழிப்பு 15 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்' உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது, லாரி வாடகையும் சேர்த்து தான் பொருட்களில் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே லாரி வாடகை உயரும் போது காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

எனவே இனி காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வரத்து அதிகரித்தாலும் லாரி வாடகை அதிகரிப்பு காரணமாக விலை குறைய வாய்ப்பு இல்லை, மேலும் பல பொருட்களில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 14 லட்சம் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பே பார்சல் லாரிகளின் வாடகை 25 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

காப்பீட்டு விதியில் திருத்தம்! காப்பீடு தொடர்பான புகார்களை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்!

பயிர்களில் மகசூலை அதிகரிக்க களை மேலாண்மை அவசியம்!

English Summary: Tamilnadu Lorry owners association increased the rental price of lorry upto 30 percent, essential commodities May go up
Published on: 05 March 2021, 07:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now