News

Monday, 11 January 2021 01:58 PM , by: Daisy Rose Mary

Credit : AajTak

ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

அடுத்த 4 நாட்களுக்கான எச்சரிக்கை

12.01.2021 - தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

13.01.2021 - தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்

14 மற்றும் 15.01.2021 தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசனது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி வரையும் இருக்கும்.

மழைபொழிவு

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புவனகிரி 11செமீ., பரங்கிப்பேட்டை 9 செமீ., ராமநாதபுரம், குடவாசல் தலா 6 செமீ., ராமேஸ்வரம், கொள்ளிடம் தலா 5 செமீ., மணமேல்குடி, முத்துப்பேட்டை, மண்டபம், சூரன்குடி, அறந்தாங்கி, அய்யம்பேட்டை, தலா 4 செமீ., வாலிநோக்கம், கும்பகோணம், ஜெயன்கொண்டம், சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் தலா 3செமீ மழையளவு பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

  • ஜன 11 மற்றும் 12 தேதிகளில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • ஜன 12 மற்றும் 13 தேதிகளில், கேரள கடலோர பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க..

47-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம் - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!!

3,000 டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு! 60,000 விவசாயிகள் பயனடைவார்கள்!

அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா : முதல்வர் அறிவிப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)