மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 July, 2020 6:36 AM IST

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்து. மழை காரணமாகச் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் கொட்டி தீர்த்த கன மழை 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை (South west monsoon) தீவிரம் அடைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை சென்னை கிண்டி, ஈக்காட்டுதாங்கல், குரோம்பேட்டை, பூந்தமல்லி உள்பட பல இடங்களில் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மழைநீரில் தத்தளித்த சென்னை 

கனமழை காரணமாக நேற்று சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குரோம்பேட்டை (Rain in crompet) பகுதிகளில் 2அடி அளவு தண்ணீர் தேங்கியது , இதனால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலைகளில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் தொடர் மழை காரணமாகச் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது.

கனமழை எச்சரிக்கை

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (Tamilandu expects Heavy to very heavy rain) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும்

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை பொழிவு (Rain in last 24 hours)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் , நாகபட்டினம் மாவட்டம் தலைஞாயிறு மற்றும் திருப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning for Fisherman)

  • இன்று தமிழக கடலோர பகுதி மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • இன்று முதல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • இன்று முதல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வரை கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 -50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும்

  • இன்று முதல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 - 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

  • இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மற்ற மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை

கேரளா, டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்ரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாவட்டங்களுக்கும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து?

இந்திய எல்லையில் நுழையக் காத்திருக்கும் (வெட்டுக்கிளி) எதிரிகள் - மத்திய அரசு எச்சரிக்கை!

English Summary: Tamilnadu to get heavy to very heavy rainfall in many Districts for next 24 hours Says IMD Chennai
Published on: 29 July 2020, 02:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now