News

Friday, 09 June 2023 11:38 AM , by: Yuvanesh Sathappan

"Target of 5 lakh acres of rice cultivation" - Minister of Agriculture

தஞ்சாவூரில் வியாழக்கிழமை விவசாயிகளுடன் கலந்துரையாடிய வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்த பருவத்தில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

டெல்டாவில் குறுவை சாகுபடியை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் அதிகாரிகள் மற்றும் டெல்டா பகுதியை சேர்ந்த 7 மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், " 2018ல் 3.26 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி, 2019ல் 2.91 லட்சம் ஏக்கராக இருந்தது. 2020ல் 4.70 லட்சம் ஏக்கராகவும், 2021ல் 4.91 லட்சம் ஏக்கராகவும் இருந்தது. 2022ல், குறுவை சாகுபடி , 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களில் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த பருவத்தில் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "ஏற்கனவே, 4,045 டன் நெல் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன, மேலும் 4,046 டன்கள் இருப்பு உள்ளது. அதேபோல், யூரியா மற்றும் டிஏபி போன்ற உரங்கள் 7,289 டன் அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன, மேலும் முறையான வண்டல் மண் அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன, இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக இலக்கை அடைய உதவும்", என்று அமைச்சர் கூறினார்.

மேட்டூர் நீர்த்தேக்கத்தில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், கர்நாடகாவிடம் இருந்து மே மற்றும் ஜூன் மாத பங்கு நீரை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகாவால் மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விவசாய அமைச்சர், கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளனர். "புதிய கர்நாடக அரசு மாநிலத்தின் நிலைமைக்கு ஏற்ப பேசி வருகிறது, ஆனால் இன்னும், எங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் தொடங்குவோம்," என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, வறட்சி மற்றும் மழையைத் தாங்கும் நெல் சாகுபடி, சாகுபடி பரப்பு அடிப்படையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன், குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க்கடன் வழங்க வேண்டும் என அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விதைகள் மற்றும் உரங்களை போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ரபி மற்றும் காரீப் பருவங்கள் தமிழகத்திற்கு பொருந்தாததால் புதிய சாகுபடி பருவத்தை அறிமுகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால், குறுவை காப்பீட்டை தமிழக அரசு கவனித்துக் கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், காப்பீட்டை மாநில அரசு பார்த்துக் கொள்ளும் என அமைச்சர் விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

மேலும் படிக்க

பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைக்கும் ஒன்றிய அரசு!

அதிகரிக்கும் பிப்பர்ஜாய் புயலின் தாக்கம்: அடுத்த 48 மணிநேரத்திற்கு தாக்கம் நீடிக்கும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)