மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 February, 2021 7:04 PM IST
Credit : News 18 Tamil

நடப்பாண்டு தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் உளுந்து 140 மெ.டன், பச்சை பயிறு 160 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு (Target) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019-20ம் ஆண்டின் சென்ற ராபி பருவத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த பயிறு வகைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum resource price) கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பச்சை பயறு, உளுந்து கொள்முதல்

உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.57 வீதமும், பச்சை பயிறு (Green lentils) கிலோவுக்கு ரூ.70.50 வீதமும் கொள்முதல் செய்யப்படடது. இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றனர். இதன் மூலம் சந்தை விலை (Market price) உயர்ந்ததால் அனைத்து பயிறு வகைகளின் மூலம், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் லாபகரமான விலை கிடைத்தது. இதேபோல் நடப்பு 2020-21ம் ஆண்டு ராபி பருவத்தில் மீண்டும் பயிறு வகைகள் சாகுபடி (Cultivation) செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து, பச்சை பயிறு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுபாட்டில் இயங்கும் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக உளுந்து 140 மெ.டன் மற்றும் பச்சை பயிறு 160 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அழைப்பு:

நன்கு காய வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோவுக்கு ரூ.60 வீதமும், பச்சை பயிறு கிலோவுக்கு ரூ.71.96 வீதமும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் (Bank account) நேரடியாக வரவு வைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சை பயிறு ஆகிய விளைப்பொருட்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 90 நாட்களுக்கு கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை (Aadhar card), வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து, பச்சைபயிறு ஆகிய விளைப்பொருட்களை விற்பனை செய்து பயன்பெற மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் (Govindha Rao) கேட்டுக் கொண்டுள்ளார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வீட்டுச் செடிகளுக்கு அற்புத உரமாகும் கெட்டுப்போன பால்!

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

English Summary: Target to buy lentils in regular sales outlets: Call for farmers to sell!
Published on: 25 February 2021, 07:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now