நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 March, 2022 4:52 PM IST
Tasmac sucking up family income

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை மதுபானங்களுக்கு விலை ஏற்றம் செய்து திரும்ப எடுத்துக் கொள்கின்றனர்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். மதுப் பழக்கத்தால் பலரது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பது நிதர்சனமான உண்மை. இதைத் தடுக்க வேண்டிய அரசே மதுவை விற்பனை செய்வது அதனிலும் கொடுமையான செயலாக உள்ளது.

டாஸ்மாக் கடைகள் (Tasmac Shops)

தமிழக அரசே மது விற்பனையில் ஈடுபட்ட பிறகு லட்சக்கணக்கான குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 'டாஸ்மாக்' கடைகள் துவங்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து வயதினருமே மது பழக்கத்துக்கு ஆளாகி விட்டனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் நடைபெறவும், அதிகரிக்கவும் மது காரணமாகிறது.

குஜராத்தைப் போல தமிழகத்தில் தனிநபர் வருமானம் ஏன் உயரவில்லை என்றால், 'இது திராவிட மாடல்' என்கிறார், நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன். குடும்பத்தின், 90 சதவீத வருவாய் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் மூலமே உறிஞ்சி எடுக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டுள்ளது.

கொடுத்த பணத்தை திரும்பப்பெற ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் பெறக்கூடிய வகையில், மது பாட்டில்களுக்கு, 10 ரூபாய் முதல் விலை ஏற்றத்தை அறிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றார்கள். தற்போது, பூரண மதுவிலக்கை கொண்டுவராமல், மதுபான விலையை உயர்த்தி உள்ளனர். முழு மதுவிலக்கை அமல்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று கிருஷ்ணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

டாஸ்மாக் கடைகள் திறப்பை தடுக்க மக்களுக்கு அதிகாரம்: புதிய சட்டத்திருத்தம்!

குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தினால் 6 மாதம் ஜெயில் தண்டனை உறுதி!

English Summary: Tasmac sucking up family income: Will that change?
Published on: 10 March 2022, 04:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now