News

Monday, 28 December 2020 05:56 PM , by: Daisy Rose Mary


நீலகிரி மாவட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ரூ.13.88 கோடி மானியத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக மத்திய அரசு செலுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை வாரியம் சார்பில், நடப்பு நிதியாண்டில் (2020-2021), ஏப்., முதல் ஆக., வரையான 6கோடியே 32லட்சம் ரூபாய் மானிய தொகை, 453 பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 7 கோடியே 56 லட்சம் ரூபாய் மானியம், 659 பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

மானிய விபரம்

அதில், சிறு விவசாயிகள் தேயிலை முன்னேற்ற திட்டத்தில், 399 பேருக்கு, 1.46 கோடி ரூபாயும், 'ஆர்த்தோடக்ஸ்' தேயிலை துாள் உற்பத்திக்கான ஊக்க தொகையில், 46 பயனாளிகளுக்கு 5.73 கோடி ரூபாயும், தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு திட்டத்தில், 181 பேருக்கு 31.76 லட்சம் ரூபாயும், மனிதவள மேம்பாட்டு திட்டத்தில், 26 பேருக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மானியமும், பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்தில், ஏழு பயனாளிகளுக்கு, 1.20 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

 

நேரடியாக செலுத்தப்பட்ட மானியம்

இந்த மானியம் குறித்து தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறுகையில்,''மொத்தமாக 13.88 கோடி ரூபாய் மானியம் சுமார் 1,112 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியம் பயனாளிகளின் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டதுடன், மொபைல் போனில், குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)