மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 June, 2021 12:53 PM IST
Ooradangil kovilgal thirappu

ஊரடங்கைத் தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 3,000 கோயில்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜூன் 25 அன்று, கோவிட் -19 ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோயில் அதிகாரிகள் கோயில்களை சுத்தப்படுத்தவும், வரிசைகளில் நின்று தரிசனம் பெற தடுப்புகளை அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்து மத மற்றும் அறக்கட்டளை (எச்.ஆர் & சி.இ) துறையின் மூத்த அதிகாரி ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் பேசுகையில், “கோவிட் -19 இன் முதல் அலைகளின் போது நாங்கள் பின்பற்றிய நெறிமுறைகள் அப்படியே இருக்கும்.பிரகாரங்களுக்குள் உட்காரவோ சுவர்களையோ சிலைகளைத் தொடவோ மணிகளை அடிக்கவோ அனுமதி இல்லை. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்,10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று இந்து மத மற்றும் அறக்கட்டளைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயில்களை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து, ஒரு பிரிவு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களைத் தவிர, பக்தர்கள் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஹெல்ப்லைனை 044-28339999 என்ற எண்ணில் அழைத்து கோயில்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் கேட்கபட்டுள்ளதாகவும் அதில் சுமார் 60% அழைப்புகள் இது தொடர்பானவை என்று அவர் கூறினார்.

பக்தர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம். கோவில் நிலங்கள் அல்லது திருவணி பணிகள் தொடர்பான புகார்கள் அல்லது கோயில்களுக்குத் தேவையான புகார்களை பதிவு செய்யவும் இந்த எண்ணில் அழைக்கலாம்.பல சிறிய கோயில்களில் கை சுத்திகரிப்பு மருந்துகள் இல்லை சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படவில்லை என்று புகார்களும் எழுந்துள்ளன. சனிக்கிழமை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு இலவச கோவிட் -19 சோதனை முகாமை திறந்து வைத்தார்.

மேலும் படிக்க:

பக்தர்களுக்கு Mask பிரசாதம் - களைகட்டும் துர்க்கை கோவில்!

27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து

கொரோனா குறைந்த மாவட்டங்களில் இனி வழக்கம் போல வங்கி சேவை தொடரும்!

English Summary: Temples to be opened in curfew
Published on: 28 June 2021, 12:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now