News

Thursday, 08 September 2022 05:43 PM , by: T. Vigneshwaran

தாமிரபரணி

தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்புத் திட்டம் அடுத்த ஆண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ரூ. 31.50 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 54.82 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் காணி பழங்குடியின மக்களுக்கு, தனிநபர் பட்டா வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், ராதாபுரத்தில் விளையாட்டு பயிற்சி மையம், மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா, நெல்லையில் மேற்கு புறவழிச்சாலை திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும் தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் திட்டங்கள், இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருப்பதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 2009ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட தாமிரபரணி நம்பியாறு, கருமேனியாறு திட்டம், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டதாகவும், தற்போது அந்த திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க:

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி, குடும்ப அட்டைதாரர்களே உஷார்

150 நாட்கள் கண்டெய்னர்களில் தூங்கும் ராகுல் காந்தி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)