மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 February, 2021 8:51 AM IST
Credit : Dinamalar

பறவைகள் பொதுவாக மரங்களில் தான் அதிகளவு கூடு கட்டும். அதிலும் சில பறவைகள் அதிபுத்திசாலிகள். பலமான காற்றடித்தாலும் கீழே விழாதபடி மரங்களில் சரியான இடத்தை தேர்வு செய்து கூடுகளை (Nests) கட்டும். ஆனால், நெற்கதிரில் ஒரு குருவி கூடு கட்டியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதிலும், அந்தக் குருவிக் கூட்டை கலைக்காமல், அறுவடை (Harvest) செய்த விவசாயியின் செயல் போற்றுதலுக்குரியது. இந்த நிகழ்வு, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நெற்கதிரில் குருவிக் கூடு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாரான நெற்கதிரில் இருந்த குருவி கூட்டைக் (Nest) கலைக்காமல், அறுவடை செய்த விவசாயியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உழைப்பின் மதிப்பை அறிந்தவன் விவசாயி, என்பதை மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியுள்ளது. கூடு கட்டுவதற்கு குருவி எடுத்த முயற்சி மற்றும் அதன் உழைப்பை வீணடிக்காமல், குருவிக் கூடு இருந்த நெற்கதிரை (Paddy) மட்டும் விட்டுவிட்டு, மற்ற நெற்கதிர்களை அறுவடை செய்துள்ளார் இந்த விவசாயி. நெற்கதிரில் கூடு கட்டிய குருவியின் செயலும், இயற்கையின் அதிசயங்களில் ஒன்று தான்.

கூட்டை கலைக்காத விவசாயி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (Ranganathan), வயது 40. இவர், 3 ஏக்கர் நிலத்தில், நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்திருந்தார். நேற்று முன்தினம் அறுவடை இயந்திரத்தை கொண்டு, நெல் அறுவடை செய்ய வயலுக்கு வந்தார். அப்போது, 3 அடி உயரத்தில் நெற்கதிர்களுக்கு இடையே குருவி ஒன்று கூடு (Nest) கட்டியிருந்தது. அதன் அருகில் சென்று பார்த்தபோது, கூட்டில் முட்டைகள் இருந்தன. இதையடுத்து, ரங்கநாதன் கூட்டை கலைக்காமல், அறுவடை செய்ய திட்டமிட்டார். பின், கூடு இருந்த இடத்தை மட்டும் விட்டு, மற்ற இடங்களில் அறுவடை செய்தார். குருவி கூடு இருந்த நெற்கதிர், கீழே சாய்ந்து விடாமல் இருக்க, இரண்டு கம்புகளை கொண்டு சேர்த்து கட்டியுள்ளார். விவசாயி ரங்கநாதனின் செயலை, பலரும் நெகிழ்ந்து பாராட்டினர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக

இரயில்மறியல் போராட்டத்தையொட்டி தண்டவாளத்தில் குவிந்த விவசாயிகள்!

பசுக்களைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பசு அறிவியல் தேர்வு!

English Summary: The bird that built its nest in the rice field! Harvested without dissolving!
Published on: 20 February 2021, 08:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now