News

Thursday, 06 October 2022 06:43 PM , by: T. Vigneshwaran

Ration Shop

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என்று கூட்டுறவுத் துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து, முன்னா மற்றும் சோட்டு என்கிற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த அறிமுகத்தை முதற்கட்டமாக, சென்னை திருவல்லிக்கேணியில் அமைக்கப்பட்டிருக்கும் நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வரவேற்பை வைத்து, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் இருக்கும் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.958 விலைக்கும், ஐந்து கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.1515 விலைக்கும் நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

சமையலுக்கான கேஸ் சிலிண்டரில் இருந்து தீர்ந்து விட்டவுடன், அதற்கான தொகையை செலுத்தி நிரப்பி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். சிலிண்டரில் கேஸ் நிரப்புவதற்கு, இந்த மாதம் இரண்டு கிலோ கேஸின் விலை ரூ.250 ஆகவும், ஐந்து கிலோ கேஸின் விலை ரூ.575 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு மற்றும் ஐந்து கிலோ எடைகளில் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

மத்திய அரசு பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், விவரம்!!

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)