மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 December, 2020 12:13 PM IST

மதுரை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து வரும் 15ம் தேதி முதல் துவரை கிலோ ரூ.60 வீதம் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்துள்ள துவரையை கிலோ ரூ60க்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, திருமங்கலம், வாடிப்பட்டி மற்றும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் டிசம்பர் 15 முதல் மார்ச் 14ம் தேதி வரை துவரை கொள்முதல் செய்யப்படும்.
எனவே துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் நிலத் திற்கான சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு செய்து கொள்ளளாம்.

முன்பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து மட்டுமே துவரை கொள்முதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. துவரையின் ஈரப் பதம், இதர பொருள்கள் மற்றும் தானியங்கள் கலப்பு, சேத மடைந்த பயறு, சுருங்கிய பயறு, வண்டு தாக்கிய பயறு ஆகிய வற்றை தரப் பரிசோதனை செய்து கொள்முதலுக்கு அனுப்பப்படும். கொள்முதல் செய்யப்பட்ட பயறுக்கான தொகை, விவசாயி களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.


மேலும் விபரங்களுக்கு, திருமங்கலம் 81100 54595. உசிலம்பட்டி - 70102 80754, வாடிப்பட்டி - 96008 02823 ஆகிய எண்களில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வட்டார வேளாண்மை விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சமையல் சிலிண்டருக்கு மாற்றாக மாட்டுச்சாணத்தில் இருந்து Biogas - ரூ.12 ஆயிரம் மானியத்துடன்!

விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் ஈட்டலாம்- வேளாண்துறை அறிவுறுத்தல்!

English Summary: The district administration has announced that Thuvarai will be purchased from the farmers of Madurai district from the 15th for Rs.60 per kilo
Published on: 10 December 2020, 12:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now