மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 January, 2022 7:03 AM IST
Booster Vaccination camp

தமிழகத்தில் 600 மையங்களில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. புதிதாக உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகிறது. தமிழகம் உட்பட நாடு முழுதும் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு, ஒன்பது மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு, முன்னெச்சரிக்கை என்ற பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (Booster dose Vaccine)

தமிழகத்தில் ஜனவரியில் மட்டும், 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதி பெற்றவர்களாக உள்ளனர். எனவே, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை போல, வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, முதலாவது பூஸ்டர் தடுப்பூசி முகாம், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளிட்ட 600 மையங்களில் இன்று நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும், 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி முகாம் (Vaccine Camp)

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோயுள்ள, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை தோறும் நடைபெறும். இந்த முகாம் மட்டுமின்றி, சனிக்கிழமை தோறும் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களிலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும்.

அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி போடவே முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதால், தொற்றின் தீவிரத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க

கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு நன்மை பயக்குமா? மருத்துவர் விளக்கம்!

வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்!

English Summary: The first booster dose vaccination camp in Tamil Nadu today!
Published on: 20 January 2022, 07:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now