மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 June, 2022 12:34 PM IST
The good news: RBI's big announcement for home loan buyers

ஆர்பிஐ தனது 3 நாள் ஆய்வுக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. இப்போது நீங்கள் உங்கள் கனவு வீட்டை எளிதாகக் கட்டலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வீடுகளை கட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன் வரம்பை அதிகரித்துள்ளது. இப்போது கூட்டுறவு வங்கிகள் 1.40 கோடி வரை கடன் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2011-ம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வரம்பு தொடர்பாக திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு டோர் ஸ்டெப் அதாவது இருக்கும் இடத்திலேயே கடன் வழங்கப்படும் வசதியை குறித்து தெரிவிக்கப்பட்டது. இது தவிர, ரிசர்வ் வங்கி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

1.40 கோடி வரை கடன் கிடைக்கும்

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், நிதிக் கொள்கை மதிப்பாய்வை வெளியிடுகையில், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (யுசிபி) இனி ரூ. 1.40 கோடி வரை வீட்டுக் கடன் வழங்க முடியும் என தெரிவித்தார். இதுவரை இந்த வரம்பு ரூ.70 லட்சமாக இருந்தது. இதுதவிர இதுவரை ரூ.30 லட்சமாக இருந்த ஊரக கூட்டுறவு வங்கியில் இனி ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம்.

கிராமப்புற கூட்டுறவு வங்கி விதிகள்

  • கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் (மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்) மற்றும் அவற்றின் நிகர மதிப்பு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பை நிர்ணயிக்கும். புதிய விதியின்படி, 100 கோடி ரூபாய் வரை நிகர மதிப்புள்ள வங்கிகள் ஒவ்வொரு நபருக்கும் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க முடியும். இதன் முந்தைய வரம்பு 20 லட்சமாக இருந்தது. மீதமுள்ள வங்கிகள் ரூ.75 லட்சம் வரை கடன் தரலாம்.
  • இதுதவிர, இதுவரை அங்கீகரிக்கப்படாத வீட்டு மனை திட்டங்களுடன் தொடர்புடைய பில்டர்களுக்கு கடன் வழங்க கிராமிய கூட்டுறவு வங்கி அனுமதிக்கப்படும்.
  • இது மட்டுமின்றி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், ஷெட்யூல்டு வங்கிகள் போன்று வாடிக்கையாளர்களுக்கு டோர் ஸ்டெப் அதாவது வீட்டுக்கே சென்று வசதியை வழங்குமாறு நகர்ப்புற கூட்டுறவு வங்கியை ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

மானியம் வேண்டுமா? விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்

English Summary: The good news: RBI's big announcement for home loan buyers
Published on: 24 June 2022, 12:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now