News

Wednesday, 25 May 2022 10:26 AM , by: T. Vigneshwaran

Governor Tamilisai Soundarajan

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை காலாப்பேட்டை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.

சிறைச்சாலையில் உள்ள 36 ஏக்கரில் கைதிகள் மூன்று ஏக்கரில் இயற்கை விவசாயப் பண்ணை அமைத்து அங்கக உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகள் , பழங்கள் மற்றும் மருத்துவச் செடிகளை உற்பத்தி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயத்தை நேரில் பார்த்த துணைநிலை ஆளுநர் கைதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நடனம், இசை மற்றும் யோகா நடத்தி வரும் சிறை நிர்வாகத்தை பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தரராஜன், கைதிகளால் நிர்வகிக்கப்படும் இயற்கை விவசாய பண்ணையை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறினார் .

உழவர் சந்தையில் கைதிகளின் பொருட்களை விற்பனை செய்ய ஸ்டால் அமைக்கப்படும் என்றார் அவர்.

ஏற்கனவே தண்டனைக் காலத்தை நிறைவு செய்துள்ள கைதிகளின் விடுதலை விவகாரம் மனிதாபிமான அடிப்படையில் மற்றும் சட்ட வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்படும் என்றும் லெப்டினன்ட் கவர்னர் கூறினார்.

காரைக்கால் சிறைச்சாலை கட்டி முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் அதுவரை காரைக்காலில் உள்ள கைதிகள் மத்திய சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க

Farming Business Idea: இந்த மரத்தை வளர்த்து, விரைவில் கோடீஸ்வரராகலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)