சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 17 May, 2021 8:55 PM IST

கீரப்பாளையம் வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என்று வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கீரப்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோடை காலத்தில் குறைந்தபட்சம் 15 நாட்கள், நிலத்தில் எந்த பணியும் செய்யாமல் ஆற வைத்து, முறைப்படுத்துவது மிக அவசியம்.ஏற்கனவே விவசாயம் செய்யும் நிலம் அல்லது ஒரு போகம் செய்யும் மானாவாரி நிலம். அல்லது நீண்ட காலமாக பராமரிக்காத தரிசு நிலம், பண்படாத நிலம் வரையிலும் கோடை உழவு மேற்கொள்வது அவசியம்.

அவ்வப்போது விவசாயம் செய்யும் நிலமாக இருதால் ஐந்து கை அல்லது ஏழு கை கலப்பை கொண்டு உழவேண்டும். நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத நிலமாக இருந்தால் சட்டிக்கலப்பை அல்லது மண்ணை திருப்பி போடுகின்ற வகையிலான கலப்பை கொண்டு உழுவதால், மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்து பகுதிகளுக்கும் சரிசமமாக கிடைக்கும்.கோடை மழையினால், நிலத்தடி நீர் உள்ளே சென்று நுண்ணுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்தும்.

மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து, குறைந்த தண்ணீர் இருந்தாலும், மண்ணின் அனைத்து அடுக்குகளுக்கும் பரவும்.கோடை மழையைப் பொறுத்து பலதானிய விதைப்பு செய்து மடக்கி உழுவதால், எதிர் காலத்தில் சிறந்த விளை நிலமாக்க மாற்றலாம். கார அமிலத்தன்மை அதிகமாக உள்ள பகுதியில் சணப்பை, தக்கை பூண்டு விதைத்து 38வது நாள் மடக்கி உழவேண்டும். மற்ற இடங்களில் அவுரி, கொழுஞ்சி மற்றும் பலதானிய விதைப்பு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: The need and advice for summer plowing
Published on: 17 May 2021, 08:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now