மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 May, 2021 8:55 PM IST

கீரப்பாளையம் வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என்று வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கீரப்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோடை காலத்தில் குறைந்தபட்சம் 15 நாட்கள், நிலத்தில் எந்த பணியும் செய்யாமல் ஆற வைத்து, முறைப்படுத்துவது மிக அவசியம்.ஏற்கனவே விவசாயம் செய்யும் நிலம் அல்லது ஒரு போகம் செய்யும் மானாவாரி நிலம். அல்லது நீண்ட காலமாக பராமரிக்காத தரிசு நிலம், பண்படாத நிலம் வரையிலும் கோடை உழவு மேற்கொள்வது அவசியம்.

அவ்வப்போது விவசாயம் செய்யும் நிலமாக இருதால் ஐந்து கை அல்லது ஏழு கை கலப்பை கொண்டு உழவேண்டும். நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத நிலமாக இருந்தால் சட்டிக்கலப்பை அல்லது மண்ணை திருப்பி போடுகின்ற வகையிலான கலப்பை கொண்டு உழுவதால், மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்து பகுதிகளுக்கும் சரிசமமாக கிடைக்கும்.கோடை மழையினால், நிலத்தடி நீர் உள்ளே சென்று நுண்ணுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்தும்.

மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து, குறைந்த தண்ணீர் இருந்தாலும், மண்ணின் அனைத்து அடுக்குகளுக்கும் பரவும்.கோடை மழையைப் பொறுத்து பலதானிய விதைப்பு செய்து மடக்கி உழுவதால், எதிர் காலத்தில் சிறந்த விளை நிலமாக்க மாற்றலாம். கார அமிலத்தன்மை அதிகமாக உள்ள பகுதியில் சணப்பை, தக்கை பூண்டு விதைத்து 38வது நாள் மடக்கி உழவேண்டும். மற்ற இடங்களில் அவுரி, கொழுஞ்சி மற்றும் பலதானிய விதைப்பு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: The need and advice for summer plowing
Published on: 17 May 2021, 08:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now