News

Sunday, 13 March 2022 11:56 AM , by: Elavarse Sivakumar

விவசாயி ஒருவர் சுயநலத்திற்காக, விஷம் வைத்து 12 மயில்களைக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் வனத்துறையினர், குரும்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சைக்கிளில் ஒருவர் மூட்டையுடன் சென்று கொண்டிருந்தார். அவரை மடக்கி மூட்டையை சோதனை செய்ததில், ஆண் மயில் ஒன்று இறந்து கிடந்தது.

விசாரணையில், அவர் குரும்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது. 75வயதான அந்த விவசாயியின் நிலத்தில் விளைந்த நெல் பயிர்களை மயில்கள் தின்று நாசம் செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மயில்கலைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார்.

சரியான நேரத்திற்காகக் காத்திருந்த அவர், விஷம் கலந்த அரிசியைக் கொடுத்து 12 மயில்களைக் கொன்று அங்குள்ள ஏரியில் புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் சண்முகத்தை கைது செய்தனர்.

சுயநலத்திற்காக, தேசியப் பறவையான மயில்களுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்திருப்பது, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க...

தொட்டால் உயிர்பறிக்கும் தாவரங்கள்- Death plant!

பிறந்து 7 நாட்களே ஆனப் பெண் குழந்தை- சுட்டுக்கொன்றத் தந்தை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)