News

Monday, 18 April 2022 06:04 PM , by: T. Vigneshwaran

Pension

பென்சன் வாங்குவோரின் நீண்டநாள் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அரசு பச்சை கொடி காட்டினால் பென்சன் தொகை விரைவில் உயரும்.

தற்போது ஓய்வூதியதாரர்கள் 80 வயதை தொடும்போது பென்சன் தொகை 20% உயர்த்தப்படுகிறது. எனினும், 80 வயதில் பென்சன் தொகையை உயர்த்துவதற்கு பதிலாக 65 வயது முதல் பென்சன் தொகையை ஆண்டுக்கு 1% உயர்த்தினால் சரியாக இருக்கும் என பென்சனர் நல சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அண்மையில் பென்சனர்கள் தொடர்பாக நடந்த நிகழ்வில் மத்திய பென்சனர் நலத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்கிடம் இதுகுறித்து ஓய்வூதியதாரர் நல சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதே பரிந்துரையை வழங்கியுள்ளது.

இந்நிலையில், பென்சன் தொகையை ஆண்டுக்கு 1% உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை ஆண்டுக்கு 1% உயரும். இதுமட்டுமல்லாமல், மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதால் மருத்துவப் படித் தொகையை (Fixed Medical Allowance) உயர்த்தி தர வேண்டும் என ஓய்வூதியதாரர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

மருத்துவப் படித் தொகை 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இதுபோக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு அரசு ஆதரவு தர வேண்டும் எனவும் பென்சனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் விரைவில் ஆட்சி கலைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)