நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 October, 2022 6:10 PM IST
PM Modi

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த 6 பெரிய யூரியா ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சட்டவிரோதமாக யூரியா விற்கப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது.

எந்த நிறுவனத்தின் உரத்தை வாங்குவது என்பது தொடர்பாக விவசாயிகளிடம் குழப்பம் இருந்தது. பிரபல நிறுவனங்களின் உரத்தை அதிக விலைக்கு வாங்கினர். இதனால், சாகுபடிச் செலவு அதிகரித்தது. இதைக் கருத்தில் கொண்டு `ஒரே நாடு, ஒரே உரம்' திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையில், தரமான உரம் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்.

சர்வதேச அளவில் தினை மீதான மதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு, தினை விதைகளின் தரத்தை அதிகரிக்க பல்வேறு ஆய்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச வேளாண் ஏற்றுமதிப் பட்டியலில், முதல் 10 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், வேளாண் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. `ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் ஏற்றுமதி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம், விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை எளிதாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிகிறது.

இ-நாம் இணைய வேளாண் சந்தை மூலம், விளை பொருட்களை நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. 1.75 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், 2.5 லட்சம் வியாபாரிகள் இ-நாம் வேளாண் சந்தை யுடன் இணைந்துள்ளனர். இந்த சந்தை மூலம் நடந்த பணப் பரிவர்த்தனை ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ யூரியாவை மத்திய அரசு ரூ.80 விலைக்கு வாங்கியது. எனினும், விவசாயிகளுக்கு ஒரு கிலோ யூரியா ரூ.6-க்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடியை செலவிடும்.

மேலும் படிக்க

விவசாயிகள் மானியம் ரூ.16,000 கோடி விடுவிப்பு

English Summary: The Prime Minister launched the 'One Country, One Fertilizer' scheme
Published on: 18 October 2022, 06:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now