மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 January, 2022 2:34 PM IST
Pongal For Cows

மழை காலத்தில் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்க உதவிய இரு மாடுகளுக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மூன்று வேளை உணவு (Food for 3 times)

சென்னை மணலி செட்டிமேடு கொசப்பூர் வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் புழல் ஏரி வெள்ள பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு அப்பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. அதற்கு மாட்டு வண்டி பயன்படுத்தப்பட்டது.

நன்றிக்கடன்

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மழை வெள்ள பாதிப்புகளில் நிவாரணம் வழங்க உதவிய செட்டிமேடு பகுதியைச் சேர்ந்த இரு வண்டி மாடுகளுக்கு பொதுமக்கள் இணைந்து நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

முன்னதாக மாடுகளுக்கு மஞ்சள் பூசி குங்குமமிட்டு அலங்கரித்தனர். பின் பூசணிக்காய் தேங்காய் எலுமிச்சை பழத்தால் திருஷ்டி சுற்றி போடப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று வாழைப்பழம் கரும்பு உள்ளிட்டவற்றை மாடுகளுக்கு வழங்கி தங்கள் நன்றிக்கடனை செலுத்தினர்.

மேலும் படிக்க

சிவகங்கையில் வெண்சேலை உடுத்தி பாரம்பரிய பொங்கல்!

மாட்டுப்பொங்கல்: உழைக்கும் மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு!

English Summary: The public who owe a debt of gratitude to the cows who helped during the rainy season!
Published on: 17 January 2022, 02:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now