மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 June, 2021 5:21 PM IST

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் ஊரடங்கு உத்தரவை இறுக்கமாக்கி மே 24 முதல் ஊரடங்கு இரண்டு வாரங்கள் என்ற கணக்கில் நீட்டிக்கப்பட்டது.ஜூன் 14 ஆம் தேதி முடிய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை மெதுவாக குறைகிறது. தமிழ்நாட்டில் தொற்றுநோய் வீதம் இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தரவின் அடிப்படையில் முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்.

மேலும் கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறும் நிலையில் கொரோனா பாதித்த குழந்தைகளுக்காக சிகிச்சை முறையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது தேவையில்லை. 6 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் பெற்றோர் மற்றும் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்படும்போது மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதுமானது.

கொரோனாவின் தாக்கத்தின் விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு முதல் தொடர்கிறது. அதில் ஒன்று முகக்கவசம் அணிவது.இன்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் வழங்கிய புதிய கோவிட் -19 வழிகாட்டுதல்களின்படி, 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டாம்.

மேலும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் ரெம்டெசிவிர் ஆன்டிவைரல் மருந்தைப் பயன்படுத்தலாம்.  சி.டி. ஸ்கேனும் அவசியம் என்றால் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் நேற்றை நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு தொற்றுநோய்களின் எண்ணிக்கை 17,321 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கொரோனா பரவல் குறைந்துவிடுட்டாலும், அந்த நிலைமை இறப்பு எண்ணிக்கைகளில் எழவில்லை என்பதே நிதர்சனம்.

மேலும் படிக்க:

கோவிட்-19 : வெளிநாட்டு தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரத்தேவைக்காக பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!!

ஒரே நிமிடத்தில் cowin.gov.in தளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்வது எப்படி?

English Summary: the spread of corona has decreased, the condition has not risen in mortality
Published on: 10 June 2021, 05:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now