மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 April, 2020 1:48 PM IST

தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் தற்காலிகமாக நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்துவதாக அறிவித்ததுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

கரோனாவின் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.  எனினும் வேளாண் பொருட்கள் உற்பத்தி மீதான தடைக்கு மட்டும் விலக்கு அளித்திருந்தது. இதனால் ஒழுங்குமுறை கூடங்கள் மற்றும் உழவர் சந்தைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றது.

டெல்டா மாவட்டங்கலான தஞ்சை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் அறுவடை பணி  நடந்து வருகிறது.  தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் பணியை மேற்கொண்டு வருகிறது. 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் சீசன், கடந்த அக்டோபர் முதல் நடப்பாண்டு செப்டம்பர் வரை நடை பெறும். இதுவரை அரசின் சார்பில் 1,950 கொள்முதல் மையங்களின் வாயிலாக,19.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, 90 சதவீதத்திற்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதால், ரேஷனில் வழங்க அரசிடம் போதியளவு  கையிருப்பு உள்ளதாக உணவு பொருள் அதிகாரி தெரிவித்தார். மேலும் தற்சமயம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் தற்காலிகமாக கொள்முதல் பணி நிறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

English Summary: The Tamil Nadu Civil Supplies Corporation has Deferred Procuring Paddy from the Delta Farmers for Two Weeks
Published on: 01 April 2020, 01:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now