News

Saturday, 29 October 2022 06:26 PM , by: T. Vigneshwaran

Promotion for Agriculture Department

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு சீரிய முயற்சிகளை வேளாண்மை-உழவர் நலத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 79 இலட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கென தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை 2021-2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இருமுறை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பல உன்னத திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதன்மையான வேளாண் திட்டங்களான "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்", முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் போன்றவை தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வை வளம்பெறச் செய்யும் திட்டங்களாகும்.

மேற்கண்ட திட்டப் பயன்களை விவசாயப் பெரு மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறையிலுள்ள அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும் திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி செயலாக்க வேண்டியுள்ளதாலும், தொடர் கண்காணிப்பு தேவைபடுவதாலும், மாவட்டம் மற்றம் வட்டார அளவில் உள்ள வேளாண் அதிகாரிகளின் காலிப்பணிடங்கள் நிரப்பப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டு, தற்பொழுது வேளாண்மைத்துறையில் 23 துணை வேளாண்மை இயக்குநர்கள் வேளாண்மை இணை இயக்குநர்களாகவும், 40 வேளாண்மை அலுவலர்கள் வேளாண்மை உதவி இயக்குநர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க

கொய்யா சாகுபடிக்கு ரூ.60 ஆயிரம் மானியம், விவரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)