News

Monday, 17 September 2018 10:32 PM

பூமி சூடேற்றம் தொடர்ந்தால், உணவுப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 'சயன்ஸ்' இதழில் வெளியிட்டுள்ள அந்த ஆய்வுக் கணிப்பின்படி, பூமியின் தட்பவெப்பம் 2 டிகிரி அளவுக்கு உயர்ந்தால் கூட, பூச்சி இனங்கள் அதிவேகமாக இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடும். மேலும் பூச்சிகளின் செறிமானத்திறனும் கூடிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.


பூமி வெப்பம் உயரும்போது, அதிகரிக்கும் பூச்சிகளின் தாக்குதலால் 10 முதல், 25 சதவீதம் வரை கோதுமை, சோளம், அரிசி போன்ற பயிர்கள் கூடுதலாக நாசமாகும். உணவுப் பயிர்களில் கோதுமைக்குத்தான் அதிகபட்ச சேதம் ஏற்படும். இந்தியாவில் அதிகம் விளையும் நெற்பயிர், 20 சதவீத அளவுக்கு பூச்சிகளால் நாசமாகும்.

அதிக அளவில் பூச்சிகள், அதுவும் அதிகப் பசியுள்ள பூச்சிகள் உருவாவது, நேரடியாக நம் சாப்பாட்டில் கை வைக்கும் பிரச்னை. எனவே, காற்றில் கரியுமில வாயு கலக்கும் விகிதத்தை வேகமாக எல்லா நாடுகளும் இப்போதே குறைக்க வேண்டும் என, ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)