மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 March, 2021 10:42 AM IST

பி.எம் கிசான் திட்டத்தின் நிதி நிதியை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்த அவர், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் என்பது விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் நேரடி பணம் பரிமாற்ற திட்டமாகும், இதன் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 / - நிதி உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வழங்கப்படுகிறது. 

இந்த தொகை மூன்று மாத தவணைகளில் ரூ. 2000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அசாம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலங்களைத் தவிரப் பிற மாநில பயனாளிகளுக்கு ஆதார் தரவுகளின் அடிப்படையில் பணம் செலுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் மாநில வாரியாக நிதி ஒதுக்கீடு செய்வதோ, ஒப்புதல் அளிக்கப்படுவதோ இல்லை. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 70,82.035 விவசாயக் குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பயன் அடைகின்றன. அந்த மாநில விவசாயிகளுக்கு ரூ.7,632,695 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தகுதியற்ற விவசாயிகளிடம் இருந்து உதவித் தொகையைத் திரும்ப வசூலிப்பது குறித்துத் தெரிவித்த அமைச்சர் தோமர் , மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் 11ம் தேதி வரை ரூ.78.37 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

English Summary: There is no plan to increase the funding of the PM Kisan says Union Minister Tomar
Published on: 19 March 2021, 10:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now