மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 August, 2022 8:58 AM IST
There is water but what is the use?

திருப்பரங்குன்றம் பகுதி நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இருந்தும் சாகுபடி பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். சமீபத்திய தொடர்மழையால் திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பினும் இப்பகுதி விவசாயிகள் இன்னும் சாகுபடி பணிகளை தொடங்கவில்லை.

நட்டம் (Loss)

விவசாயி சிவராமன் கூறுகையில், ''மானாவாரி பகுதியான தென்பழஞ்சி பகுதி கிராமங்களில் தண்ணீர் இருந்தால் மட்டுமே ஆண்டுதோறும் ஆடி 18 இல் நெல் நாற்றுப் பாவுதல், காய்கறிகள் விதை நடவு செய்வோம். இந்த ஆண்டு சமீபத்திய மழையால் கண்மாய், கிணறுகள், ஆழ்குழாய்களில் போதிய தண்ணீர் உள்ளது. இருப்பினும் விளைபொருள்களுக்கு போதுமான விலை கிடைக்காமல் ஆண்டுதோறும் நட்டம் அடைகிறோம்.

இந்தாண்டு உழவு, வரப்பு வெட்டுதல், பரம்பு அடிப்பது, நடவுக்கு கூலி உயர்ந்துவிட்டது. அறுவடை இயந்திர வாடகை, உரம் மற்றும் இடுபொருள்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் நெல் மற்றும் விளை பொருள்களின் விலை உயரவில்லை. ஆண்டுக்காண்டு நட்டம் அதிகரிக்கிறது.

இதுவே விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்க தயங்குவதற்கான காரணம். மற்ற பொருள்களுக்கு நிரந்தரமான விலை நிர்ணயம் செய்யப்படுவது போல், விளை பொருட்களுக்கும் அரசு நிரந்தர விலையை நிர்ணயம் செய்தால் தான் விவசாயிகள் லாபம் பெற முடியும். தொடர்ந்து விவசாய பணிகளில் ஈடுபடவும் செய்வர், என்றார்.

மேலும் படிக்க

தென்னைக்கு பயிர் காப்பீடு வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம்: கால்நடை மருத்துவர் அறிவுரை!

English Summary: There is water but what is the use? Not the right price!
Published on: 08 August 2022, 08:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now