நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 July, 2022 8:09 PM IST
No petrol in next 5 years

பெட்ரோல் விலை அவ்வப்போது உயர்ந்து வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோலே இருக்காது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சாத்தியம் தானா? அப்படி சாத்தியமானால், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தான் இந்தியாவில் அதிகரிக்கும்.

பெட்ரோல் (Petrol)

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யபீத் பல்கலைக்கழகத்தில் நிதின் கட்கரிக்கு நேற்று முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நிதின் கட்கரி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், மகாராஷ்டிர மாநிலம் விதர்பா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பயோ எத்தனால் எரிபொருள் தற்போது வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆழ் கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்து கிலோ 70 ரூபாய் என விற்பனை செய்யலாம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோலே இருக்காது. அதன்பின் பெட்ரோல் தடை செய்யப்படும்.

விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமல்லாமல் மின்சாரம் வழங்குபவர்களாகவும் இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, சோளம் விளைவிப்பதால் மட்டும் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றிவிட முடியாது, என்று பேசியுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோலுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோலே இருக்காது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

இரயில் டிக்கெட் புக்கிங்: புதிய வசதியை அறிமுகம் செய்தது IRCTC!

வேளாண் கழிவுகளில் இருந்து பயோ எத்தனால்: சென்னை ஐஐடி கண்டுபிப்பு!

English Summary: There will be no petrol in the next 5 years: Union minister's controversial speech!
Published on: 08 July 2022, 08:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now