News

Friday, 02 September 2022 09:33 PM , by: Elavarse Sivakumar

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு பொருந்தாது. அரசு அனுமதி பெறாமல், எந்த சலுகைகளையும் அனுமதிக்கக் கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒப்புதல் கட்டாயம்

இது தொடர்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் கூறியுள்ளதாவது:அரசு ஊழியர்கள் சலுகை தொடர்பான அரசாணைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவனம் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தாது.
ஊதிய மாற்றம், பணி சலுகை போன்றவற்றை, அப்படியே தங்கள் ஊழியர்களுக்கு அமல்படுத்தக் கூடாது. அதற்கு, அரசு ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம்.

நிதிச்சுமை

அரசு சலுகைகள் அனைத்தையும் நிதித் துறை ஒப்புதல் பெறாமல் அமல்படுத்துவதால், நிதிச்சுமை கூடுதலாகிறது. இது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

அரசு ஊழியர்கள் அல்ல

பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல.எனவே, அரசு ஊழியர் சலுகை அனைத்தையும், அவர்கள் கோர முடியாது.

நெறிமுறைகள்

நிறுவனங்கள் தனித்து செயல்படுபவை. எனவே, அவை நிதியை நிலையை பொறுத்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே சில வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

ரூ.399க்கு ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)