மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 October, 2021 2:53 PM IST

தீபாவளிக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று போனஸ் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது.

நெருங்கும் தீபாவளி (Approaching Diwali)

பண்டிகைக்காலம் வந்தாலே செலவும் வரும், வருமானம் வரும். அந்தவகையில், |தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகியுள்ளன.

அகவிலைப்படி (Dearness Allowance)

ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டபடி அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது கூடுதலாக 3% அகவிலைப்படியை அதிகரித்து மொத்தம் 31 விழுக்காடாக உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

நிலுவைத் தொகை (Amount outstanding)

அகவிலைப்படி நிலுவைத் தொகையும் தீபாவளிக்குள் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அதேபோல், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி இன்னும் நிலுவையில் உள்ளது. இத்தொகையும் விரைவில் செலுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PF வட்டித் தொகை (PF interest amount)

6 கோடிக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் வாங்குவோருக்கு தீபாவளிக்கு முன்பாகவே 2020-21ஆம் ஆண்டுக்கான PF வட்டித் தொகை செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் வட்டித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கே வந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகை, PF வட்டித் தொகை என மூன்றும் ஒரே நேரத்தில் வந்தால், தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் 3 போனஸ் கிடைக்கிறது என்றேக் கூறலாம்.

மேலும் படிக்க...

ரேஷன் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு-தீபாவளி ஏற்பாடு!

தங்க நகைக் கடன் வட்டித் தள்ளுபடி- PNB அதிரடி அறிவிப்பு!

English Summary: Three bonuses for Deepavali - Government employees!
Published on: 16 October 2021, 02:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now