News

Wednesday, 26 September 2018 09:59 PM

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் சிலர் மூன்று போகம் நெல் சாகுபடி செய்கின்றனர்.

கோவை, மதுரை, தஞ்சாவூர், அம்பாசமுத்திரம் வேளாண் கல்லுாரிகள் சார்பில் வீரிய ஒட்டு புதிய நெல் ரகங்களான கோ 43, ஏ.டி.டி.45, அட்சயா, ஏ.எஸ்.18, ஏ.எஸ்.டி. 16, சி.ஆர். 1009, செல்லப்பொன்னி உள்ளிட்டவை 90 முதல் 140 நாட்கள் பயிர்களாக பயிரிடப்படுகின்றன.

மன்னாடிமங்கலம் இப்பகுதியில் 110 நாட்களில் விளையும் செல்லப்பொன்னி நெல்லானது பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பூச்சி தாக்குதல் குறைவு. உரம் அதிகம் வைத்தால் பயிர் நிலத்தில் சாய்ந்து விடும். எனவே குறைந்த உரம்  போதுமானது. வற்றாத கிணறு இருப்பதால் ஆண்டுக்கு மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குப்பை உரம், மக்கிய கால்நடை சாணத்தை கலந்து உழவு செய்வதால் பயிருக்கு ஊட்டச்சத்து, நுண்ணுாட்டச்சத்து கிடைக்கிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)