News

Friday, 02 September 2022 07:18 PM , by: Elavarse Sivakumar

நியாயவிலைக்கடைகளில் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க ஏதுவாகவும், சில்லறைப் பிரச்னைக்குத்தீர்வு காணும் வகையிலும், UPI  பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.

எவர்சில்வர் கொள்கலன்களில்

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

UPI வசதி

தமிழக நியாயவிலைக் கடைகளில், UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகமாக உள்ளது.அதாவது  தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)