News

Thursday, 18 February 2021 03:57 PM , by: Daisy Rose Mary

Credit : Hindu tamil

திருநெல்வேலி மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு விடப்படுகிறது.

வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரங்கள்

செயின் வகை அறுவடை இயந்திரத்துக்கு வாடகையாக மணிக்கு ரூ.1,415, டயா் வகை அறுவடை இயந்திரத்துக்கு வாடகையாக மணிக்கு ரூ.875 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு விவசாயி குறைந்தபட்சம் 5 மணி நேரம் அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு அமா்த்திக் கொள்ளலாம்.

வாடகைத் தொகையை சம்பந்தப்பட்ட உதவிச் செயற்பொறியளா் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வாடகை அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் வாடகைத் தொகையானது எரிபொருள் செலவு, ஓட்டுநா் கூலி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

விவசாயிகள் பயன்பெற அழைப்பு

தற்போது பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிா் அறுவடை நடைபெற்று வருவதால், நெல் அறுவடை இயந்திரம் தேவைப்படும் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு பெற விரும்பும் திருநெல்வேலி வருவாய் கோட்ட பகுதி விவசாயிகள் 9488666640, சேரன்மகாதேவி வருவாய் கோட்ட பகுதி விவசாயிகள் 7598131761 என்ற செல்லிடப்பேசி எண்ணில் அழைப்பு வாயிலாகவும், கட்செவி அஞ்சல் மூலமும் தொடா்பு கொள்ளலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

மேலும் படிக்க...

மேக் இன் இந்தியாவை ஊக்குவிப்பதற்காக உள்நாட்டு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசு!!

கால்நடை தொழிலை விரிவாக்கம் செய்ய மானியம்! - விவசாயிகளுக்கு அழைப்பு!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட13,000 விவசாயிகளுக்கு ரூ.16.48 கோடி வெள்ள நிவாரணம்!!

மாடி தோட்டம் அமைக்க மானிய விலையில் இடு பொருட்கள் - பயன்பெற அழைப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)