சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 19 March, 2022 8:13 PM IST
TN agriculture budget 2022

கடந்த ஆண்டு தான், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

நிழல் நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை என்ற பெயர்களில் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த 15 ஆண்டுகளாக தனது பட்ஜெட் எதிர்பார்ப்புகளையும், ஆட்சியில் இருந்தால் தான் என்ன செய்திருப்போம் என்பதையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

நிழல் நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை என்ற பெயர்களில் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த 15 ஆண்டுகளாக தனது பட்ஜெட் எதிர்பார்ப்புகளையும், ஆட்சியில் இருந்தால் தான் என்ன செய்திருப்போம் என்பதையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Also Read:4 லட்சத்திற்கும் குறைவான விலையில் இதோ மூன்று கார்! 

விவசாயத்திற்கு ஏதுவாக கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும் வேளாண்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாதியின் பெயரில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

மழை நீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் பாசன பரப்பை வலுப்படுத்துவது, சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டு பண்ணை முறையை ஊக்குவிப்பது என அரசு அறிவித்தது.

பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு, அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ25 லட்சம் செலவில் நெல் விதைகள் உற்பத்தி, உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை கள் என பல திட்டங்கள் வேளாண் பட்ஜெட் 2021-22இல் அறிவிக்கப்பட்டன.

சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 ஹார்ஸ் பவர் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும் என்றும் கடந்த ஆண்டு தமிழக வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதியளித்திருந்தார்.

மேலும் படிக்க

தமிழக பட்ஜெட்: உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000

English Summary: TN Agri Budget: Separate Budget for Agriculture 2022-23
Published on: 19 March 2022, 07:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now