நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 December, 2022 6:22 PM IST

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும்

பொருட்டு 40 இலட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2.விவசாயிகளின் நலனுக்காக ரூ.15.40 கோடி செலவில் வேளாண் கட்டடங்கள்

விவசாயிகளின் நலனுக்காக ரூ.15.40 கோடி செலவில் வேளாண் கட்டடங்கள், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் விநியோகம், நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் பயறு விதைகள் விநியோகம், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டிலான பணி ஆணைகள், 350 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான கிரயப் பத்திரங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

3.டிச.19-ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த பி.கே.எஸ்

திருச்சி: விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான கொள்முதல் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய கிசான் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில், டிசம்பர் 19 ல் , டில்லியில் போராட்டம் நடத்தப்படும். பிகேஎஸ் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் பெருமாள் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை, இயற்கை விவசாயிகளுக்கு உர மானியம், விவசாயம் சார்ந்த உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி ரத்து, இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் பண உதவி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய சாசனத்தை வலியுறுத்தினார். பிரதமர் கிசான் சம்மான் நிதி மற்றும் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை முழுமையாகத் தடை செய்யக்கோரி விவசாய சங்கம். டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

4.PMMSY: பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக 3.8 மில்லியன் பச்சை புலி இறால் விதைகள் வெளியீடு

ராமநாதபுரம்: மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டல மையம் மன்னார் வளைகுடாவில் உள்ள சீனியப்பா தர்காவில் 3.8 மில்லியன் பச்சை புலி இறால் விதைகளை புதன்கிழமை வெளியிட்டது. இது ‘பால்க் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடாவில் உள்ள பச்சைப்புலி இறால் பிந்தைய லார்வாக்களை கடல் வளர்ப்பு’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. PMMSY இன் மத்தியத் துறைத் திட்டக் கூறுகளின் கீழ், மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் மீன்வளத் துறையின் மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
இறால் விதைகளை மண்டபம் வட்டார மையப் பணியாளர்கள் ஜி தமிழ்மணி, தலைமைப் பொறுப்பாளரும், முதன்மை ஆய்வாளருமான தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டனர்.

5.தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2022 ஏற்பாடு

2022 டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் லீலா பேலஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் “தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2022” இல், தமிழகத்தை காலநிலைக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவதற்கான வழி குறித்து விவாதிக்க மூத்த அரசு அதிகாரிகள், காலநிலை நிபுணர்கள் மற்றும் பல சர்வதேச முகமைகள் ஒன்று கூடினர். இந்த 2 நாள் மாநாட்டில், காலநிலை மாற்றம் பணி இயக்கத்தை தொடங்கி வைப்பார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

6.நபார்டு வங்கியின் தலைவராக கே.வி.ஷாஜி நியமனம்

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியாக (நபார்டு) தலைவராக கே.வி.ஷாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு NABARD இன் துணை நிர்வாக இயக்குநராக (DMD) மே 21, 2020 வரை பணியாற்றினார். இவர் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM) பொதுக் கொள்கையில் PGDM பட்டம் பெற்ற விவசாயப் பட்டதாரி ஆவார். நபார்டு வங்கியில் சேர்வதற்கு முன்பு, கனரா வங்கியில் 26 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். கனரா வங்கியின் கார்ப்பரேட் அலுவலகத்தில், அவர் உத்தி, திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டிற்கான பொறுப்புகளை வகித்தவர். சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கி இணைப்பிலும் பங்காற்றிவர் என்பது குறிப்பிடதக்கது.

7.வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு திட்டங்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 19.16 இலட்சம் தென்னங்கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 2 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளையும், அதே நேரம் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195/- சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 கரும்பு விவசாயிகளுக்கு ஆணைகளையும் வழங்கினார்.

8.விரைவில் திருவாரூரில் சோலார் பூங்கா அமைக்கப்பட உள்ளது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இந்தியாவிலேயே அதிகளவு காற்றாலை மின் உற்பத்தி செய்யும் தமிழ்நாடு, அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 மெகா வாட் அளவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில், முதற்கட்டமாக திருவாரூரில் சோலார் பூங்காவை அமைக்கவிருக்கிறது.

9.மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் FAI ஆண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்

மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்திய உர சங்கத்தின் (FAI) ஆண்டு கருத்தரங்கு 2022 (2030க்குள் உரத் துறை) புது தில்லியில் புதன்கிழமை தொடங்கி வைத்தார். அருண் சிங்கால், உரத் துறை செயலாளர் ஸ்ரீ அரவிந்த் சவுத்ரி, டிஜி எஃப்ஏஐ, ஸ்ரீ கே.எஸ்.ராஜு, தலைவர் எஃப்.ஏ.ஐ மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

10.மாண்டூஸ் புயலின் புதிய தகவல்கள்

இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, டிச.7-ம் தேதி (நேற்று) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, தென்கிழக்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து ‘மான்டூஸ்' புயலாக மாறி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, 8, 9-ம் தேதிகளில் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டி தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலைபெறக்கூடும். வரும் 9-ம் தேதி இரவு மற்றும் 10-ம் தேதி காலைக்குள் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் படிக்க:

IMD-இன் சூறாவளி அறிவிப்பு: விவசாயிகள் அச்சத்தில்| TNAU| Agri & Food Startups-க்கு சிறப்பு பயிற்சி

PMFBY| ரூ.10000/- மானிய உதவியில் Electric motor pump set-கள்| ஆவின் பாலகம் நிறுவ 30% மானியம்

English Summary: TN Agri News: 20 Mobile Vegetables Vehicle Launched | Agricultural buildings TN| Farmers unions protest in Delhi
Published on: 08 December 2022, 04:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now