மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 March, 2021 8:20 AM IST

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவிவருகிறது.

வேட்புமனுக்கள் பரிசீலினை

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் சார்பில் 6 ஆயிரத்து 183 மனுக்கள், பெண்கள் சார்பில் 1,069 மனுக்கள், திருநங்கைகள் சார்பில் 3 மனுக்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்தநிலையில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை கடந்த 20-ந் தேதி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை சீமான் ஆகியோர் வேட்பு மனுக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

4 ஆயிரத்து 506 மறுக்கள் ஏற்பு

இந்த வேட்புமனு பரிசிலையின் போது மொத்தம் 4 ஆயிரத்து 506 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 741 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கடைசி நேரத்தில் போட்டியிட விரும்பவில்லை என்று எண்ணும் வேட்பாளர்கள் தங்களுடைய மனுவை திரும்ப பெற்று கொள்வதற்கு நேற்று மதியம் 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பலர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.

4 ஆயிரத்து 220 பேர் போட்டி

இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதன்படி நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 6 பேரும் போட்டி களத்தில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.

முக்கிய கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

  • சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

  • தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 24 பேர் போட்டியிடுகின்றனர்.

  • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் 35 பேர் களத்தில் உள்ளனர்.

  • கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.

  • திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 20 பேர் போட்டியிடுகிறார்கள்.

  • விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் இவருடன் சேர்த்து போட்டியிடும் 29 வேட்பாளர்கள்

English Summary: TN election 2021: 4,220 contestants in 234 constituencies - Final candidate list released !!
Published on: 23 March 2021, 08:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now