மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 April, 2019 4:45 PM IST

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை 09:30 மணியளவில் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி தேர்வு நிறைவு பெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 9 லட்சத்திற்கும் அதிகமான  மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். 

தேர்வு முடுவுகளை மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள கல்வி துறை பலவித முன் ஏற்பாடுகளை செய்திருந்தது. பள்ளி வளாகத்தினுள் முடிவுகளை காண ஏற்பாடு செய்திருந்தது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேசிய தகவியலில் மையம், மாவட்ட நூலகம் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ள  ஏற்பாடு செய்திருந்தது. மேலும் குறுஞ்ச்செய்தி மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டது.

பொது தேர்வில் மொத்தம் 12,548 பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  தேர்வு எழுதினார். இதில் 6100 பள்ளிகளில் 100%  தேர்ச்சி அடைந்துள்ளனர்.மொத்த தேர்ச்சி விகிதம் 95.2% மாணவ , மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவியர்கள் 97%, மாணவர்கள் 95.2 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.    

பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் மொத்தம் 302 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் 190 பள்ளிகளில் 100 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட  இவ்வாண்டு அதிகரித்து உள்ளது. திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதத்துடன் மீண்டும் முன்னிலையில் உள்ளது.

மே 2 ஆம் தேதி முதல் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையத்திலிருந்து பெற்று கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்கள்  கிடைத்து பதினைந்து தினங்களில் மாணவர்கள் பள்ளிகளின் மூலமாக வேலை வாய்ப்பு மையத்தில் பதிந்து கொள்ளலாம். நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் மூலமாக இதனை செய்து வருகிறது.

பள்ளி மாணவர்கள் அல்லது, மூன்றாம் பாலினத்தவர்கள், கைதிகள் என பலரும் எழுதி இருந்தனர். கணிசன அளவில் இவர்களில் பெரும்பாலானோர் தேர்வாகி இருந்தனர்.  

English Summary: TN, Pondycherry and Karaikal SSLC Results Declared. Triupur Leading Again
Published on: 30 April 2019, 04:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now