சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 28 June, 2022 4:34 PM IST
TNAU: Online application for Masters and PhD courses has started
TNAU: Online application for Masters and PhD courses has started

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் படிப்புக்கான ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக, துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் கோவை, மதுரை, மேட்டுப்பாளையம், திருச்சி, தேனி, கிள்ளிக்குளம் உள்ளிட்ட 8 கல்லூரிகளில் 32 துறைகளில் எம்.எஸ்.சி. முதுநிலை பட்டப்படிப்பும், 28 துறைகளில் முனைவர் (பி.ஹெச்டி) பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகின்றன என்றார்.

இரண்டாண்டுகளை கொண்ட முதுநிலை பட்டப் படிப்பில் 400இடங்களும், மூன்றாண்டுகளை கொண்ட முனைவர் பட்டப்படிப்பில் 200 இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. நடப்புகல்வியாண்டு முதுநிலை மற்றும் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை தொடங்கிவிட்டது. https://admissionsatpgschool.tnau.ac.in இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இளங்கலை, முதுநிலை படித்துமுடித்த மாணவர்கள் ப்ரொவிஷனல் சான்றிதழ் மூலமாகவும், தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வர்களிடம் இருந்து படிப்பு முடிவுற்ற சான்றிதழ் (Course Completion Certificate) பெற்றும் விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது. மாணவர் சேர்க்கைக்கான பிரத்யேக இணையதள பக்கம் ஆகஸ்ட் 8-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை இயங்கும். கொரோனா காரணமாக கடந்தாண்டுகளில் மாணவர் சேர்க்கை தள்ளிப்போனது, எனவே நடப்பாண்டு உரிய நேரத்தில் சேர்க்கை நடத்தி முடிக்கப்படும்.

ஆகஸ்ட் 27-ம் தேதி மாதிரித் தேர்வும், 28-ம் தேதி நுழைவுத் தேர்வும் நடத்தப்படும். மாதிரித் தேர்வு என்பது மாணவர்கள் அசல் நுழைவுத் தேர்வை எழுதுவதற்கான பயிற்சி. நுழைவுத்தேர்வாகும், இது பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படும்.

செப்டம்பர் 2-ம் வாரம் சேர்க்கை தொடர்பான பணிகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிடும். செப்டம்பர் 3-வது வாரம் மாணவர்கள் கட்டணம் செலுத்தி படிப்புகளில் சேர்ந்து கொள்ள வேண்டும். அக்டோபர் முதல் வாரம் வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அட்மிஷன் தொடர்பான முக்கிய தேதிகள் அறிய பதிவை தொடரவும்.

SBI, HDFC, ICICI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: அது என்ன?

மேலும் முக்கிய தேதிகள்:

TNAU இணையதளத்தில் சேர்க்கை அறிவிப்பின் ஹோஸ்டிங் & ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி 27.06.2022
விண்ணப்ப ரசீதுக்கான கடைசி தேதி 08.08.2022 (நள்ளிரவு 12:00 வரை)
ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு 11.08.2022
மாதிரி மற்றும் ஆன்லைன் முதன்மை நுழைவுத் தேர்வு நடத்துதல் 27.08.2022
தேர்வு பட்டியல் அறிவிப்பு செப்டம்பர் 2வது வாரம், 2022
சேர்க்கை மற்றும் கட்டணம் செலுத்துதல் செப்டம்பர் 3வது வாரம், 2022
மான்சூன் செமஸ்டர் பதிவு செப்டம்பர் 4, 2022

மேலும் படிக்க:

இன்றைய விரைவுச் செய்திகள்

ஆடு வளர்ப்பின் முதல் கட்டத்தில், நீங்கள் செய்யும் பொதுவான தவறுகள்

English Summary: TNAU: Online application for Masters and PhD courses has started
Published on: 28 June 2022, 04:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now