நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 June, 2021 8:42 AM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் தர வாரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது

தர வாரிசைப் பட்டியல்

தேசிய அளவிலான வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் குறித்த தர வாரிசைப் பட்டியல், வேளாண் வணிகம் மற்றும் ஊரகம் சார்ந்த ஆலோசனையை வழங்கும் கான்சப்ட் வேளாண் நுட்ப ஆலோசனை மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தரவாரிசைப் பட்டியல், வேளாண்மைக் கல்வி நிறுவனங்களின் வேளாண் தொழில் துறை சார்ந்த பாடத்திட்டம் கற்பித்தலில் புதுமை, சேர்க்கை முறை, கல்விக் கட்டணம், விளையாட்டு சார்ந்த கட்டமைப்பு, தொழில் நிறுவனங்களுடனான தொடர்புகள், வேலை வாய்ப்புகள், சர்வதேச மாணவர் பாரிமாற்றம் மற்றும் ஏனைய உள் கட்டமைப்பு வசதிகள் முதலியவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

TNAU-க்கு 15 வது இடம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத்துறை, இந்திய வேளாண் வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் குறித்த தர வாரிசைப் பட்டியலில், இந்திய மேலாண்மை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திந்திய வேளாண் வணிகக் கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் 15 வது இடம் பிடித்துள்ளது.

வேளாண் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை, வேளாண் வணிக மேலாண்மையில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.

முதுநிலை பட்டப்படிப்பு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தினால் அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பயின்ற மாணவர்கள், வேளாண் உற்பத்தி, பதனிடுதல், இடுபொருட்கள், வங்கிகள், சில்லறை வணிகம் மற்றும் ஏனைய வேளாண்மை சார்ந்த நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். சில மாணவர்கள் வேளாண் தொழில் முனைவோர்களாகவும் வெற்றி அடைந்துள்ளனர். இத்துறையில் பயின்ற இளநிலை மாணவர்கள், இந்தியாவின் முதன்மை வணிக மேலாண்மை கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் படிக்க...

மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!

தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பொறி!

தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

English Summary: TNAU ranked among the Top Agribusiness Management Schools
Published on: 09 June 2021, 08:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now