News

Tuesday, 23 March 2021 09:47 AM , by: Daisy Rose Mary

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற விஞ்ஞானிக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டது.

குஜராத்தில் உள்ள ஆனந்த் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் வேளாண் காலநிலை சங்கமானது வருடந்தோறும் வேளாண் காலநிலை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுதலையும், விருதுகளையும் வழங்கி கொளரவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் 2021 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தலைவரும் ஓய்வு பெற்ற பேராசியருமான முனைவர் தி.நா. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இச்சங்கத்தின் கௌரவ விருது காலநிலை ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதற்கும், காலநிலை முன்னறிவிப்புகளை வழங்கியதற்கும் முதுகலை மாணவர்களுக்கு காலநிலை கல்வி போதித்தல் மற்றும் வழிகாட்டியாக இருந்ததற்காகவும் வழங்கப்பட்டது.


இவ்விழாவிருத்தானது, பஞ்சாப் லூதியானாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் தேசிய மெய்நிகர் வேளாண் காலநிலை கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்;மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் அவர்கள் தலைமையுரையாற்றி ஓய்வுவெற்ற பேராசிரியருக்கு வேளாண் சங்கத்தின் கௌரவ விருதினை வழங்கி பாராட்டுதலை தெரிவித்தார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)