மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 December, 2020 11:11 AM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்  (TNAU) உருவாக்கப்பட்ட பயிர் வளர்ச்சி ஊக்கி திரவத்திற்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள விதை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பயிர் வளர்ச்சியை மேம்படுத்தும் புரத சத்துக்களை உள்ளடக்கிய பயிர் வளர்ச்சி ஊக்கி திரவம்' உருவாக்கப்பட்டது.

வளர்ச்சி ஊக்கியின் பயன்கள் (Benefits)

  • இந்தப் புரத திரவத்தை, 1 - 15 சதவிகித அளவில் பூக்கும் தருணத்திற்கு சற்று முன்பும், பூக்கும் தருணத்திலும் பயிர்களின் இலைவழியாக தெளித்தபோது, நெல், பருத்தி மக்காச்சோளம் ஆகிய அனைத்து பயிர்களிலும் 15 சதவிகிதம் மகசூல் அதிகரித்தது.

  • மேலும் பூசுதலின் 40 சதவிகித அளவில் இப்புரததிரவத்தைக் கொண்டு விதை முலாம் மூலமாக, விதைகளின் முளைப்புத்திறன் 6 - 8 சதவிகிதம் உயர்ந்ததோடு, நாற்றுக்களின் வீரியமும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டது.

  • இதை தவிர, விதைப்பதற்கு முன் 0.5 - 0.75 சதவிகிதம் இப்புரத கரைசலில் விதைகளை 12 மணி நேரம் ஊற வைத்து பின் விதைப்பதாலும் விதை முளைப்புத்திறன் 6-10 சதலிகிதம் அதிகரித்து பலன் அளித்ததைக் காண முடிந்தது.

இந்த பயிர் வளர்ச்சி ஊக்கி திரவம் சீட் எய்ட்' மற்றும் 'நியூட்ரிகோல்ட் என்ற இருவேறு வடிவங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, விதை மையத்தை சார்ந்த முனைவர்கள் இரா.உமாராணி, அவர்கள் தலைமையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு இந்திய காப்புரிமை பெற விண்ணப்பித்திருந்தனர்.

உரிய பரிசீலனைகள் மற்றும் நேர்காணலுக்குப் பிறகு சென்னை காப்புரிமை அலுவலகம் புரதத்தை பிரித்தெடுத்தல் மற்றும் விதை நேர்த்தி மற்றும் இலைவழி தெளிப்பு' மூலமாக மகருலை மேம்படுத்தும் தொழில்நுட்பத்திற்கான, இந்திய அரசின் காப்புரிமையை  (Patent Rights) வழங்கியுள்ளது

இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய விஞ்ஞானிகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர், முனைவர். நீ குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் படிக்க...

புரெவி புயல் வலுவிழந்தது- தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!

TNAUவில் டிச.5ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி!

English Summary: TNAU's New Crop Growth Technology - Patented by Central Government!
Published on: 05 December 2020, 11:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now