மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2022 2:32 PM IST
TNPSC 2022: Child Protection Officer Employment! Last date to apply!

TNPSC recruitment 2022: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள, kgகுமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில்16 பணியிடங்கள் உள்ளன, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.04.2022க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (District Child Protection Officer).

மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 16

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology படிப்பு முடித்திருத்தல் வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆட்டோமொபைல் இன் ஜினியர் பணியிடங்களுக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது என்பது குறிப்பிடதக்கது.

சம்பளம் விவரம்: ரூ.56,100 – 2,05,700

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெற இருக்கின்றன. முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. இதற்கான கால அளவு 3 மணி நேரமாகும்.

இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வாகும். இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயமாகும். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடதக்கது. இது தகுதித் தேர்வு மட்டுமே, மேலும் இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவும் 3 மணி நேரமாகும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 19.06.2022

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150 ஆகும், இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வுக் கட்டணம்: ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு என்பது குறிப்பிடதக்கது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள், அதே பதிவு மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2022 எனவே விரைவில் விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க:

Cucumber Farming: கோடையில் வெள்ளரி சாகுபடி செய்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்

PM-Kisan 11வது தவணைத் தொகை- அடுத்த வாரம் வருகிறது ரூ.2000!

English Summary: TNPSC 2022: Officer Recruitment! Last date to apply!
Published on: 12 April 2022, 02:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now